TRENDING
Love ஆரம்பிச்சது அங்கதான்.. ஐஸ்வர்யா – உமாபதிக்கு இடையே காதல் மலர்ந்தது இப்படி தானா..
நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவும் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொல்லப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் அர்ஜுன் விருகம்பாக்கத்தில் கட்டியிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து ஐஸ்வர்யா மற்றும் உமாபதி ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தற்போது ஐஸ்வர்யாவும் உமாபதியும் காதலில் விழுந்தது எப்படி என்பது குறித்த செய்திகள் வலம் வருகிறது. நடிகர் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக உமாபதி கலந்து கொண்டார். அதன் ஷூட்டிங் தளத்திற்கு அடிக்கடி சென்று வந்த போது ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும், உமாபதிக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த விஷயம் அர்ஜுனுக்கு தெரியவந்தது. ஏற்கனவே உமாபதியின் கேரக்டர் தெரிந்ததால் உடனே அர்ஜுன் ஓகே சொல்லிவிட்டாராம்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஐஸ்வர்யாவுக்கும் உமாவதிக்கும் இடையே மூன்று வயது வித்தியாசம் இருக்கிறதாம். ஐஸ்வர்யாவுக்கு 31 வயது. உமாபதிக்கு 28 வயது என பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் கூறியிருக்கிறார். மேலும் ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என தம்பி ராமையா போட்ட கண்டிஷனையும் வித்தகன் யூடியூப் இன்டர்வியூவில் கூறியிருக்கிறார்.