Categories: CINEMA

என்ன பொண்ணு போல பாத்துக்கிட்டாங்க.. அந்தப் படத்துல சேரன் தான் ரொம்ப கஷ்டப்பட்டாரு.. மனம் திறந்த 80’களின் கனவு நாயகி ஸ்ரீஜா..!

தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வளம் வந்த ஸ்ரீஜா. தற்போதைய போட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.

நடிகை ஸ்ரீஜா இவரைப் பற்றி இன்றைய தலைமுறை நேரத்தில் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. 1988 முதல் 1994 வரை தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிக முக்கிய திரைப்படங்களில் நடித்தவர். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் 1982 ஆம் ஆண்டு தனது 11 வயதில் ஸ்ரீஜா நிதி என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து 3 வருடம் கழித்து முத்தம் தரம்குந்து என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி மலையாள சினிமாவில் வரிசை கட்டி நடித்து வந்த இவர் அதன் பிறகு மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கினார். இப்படி கேரளாவில் நல்ல வரவேற்பும் நல்ல அறிமுகத்தையும் பெற்றுக் கொண்ட இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்த நடிகையாக வளம் வந்தார்.

அதைத்தொடர்ந்து முதன் முறையாக தமிழில் மௌனம் சம்மதம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் சரத்குமார் மனைவியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து கேஸ் ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் என்ற திரைப்படத்தில் நடித்தார். புரியாத புதிர் என்ற முதல் படத்திற்கு பிறகு கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜயகுமாரின் மகளாக நடித்திருப்பார்.

இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. 90களில் ஆரம்பத்தில் தமிழ் மலையாள உள்ளிட்ட திரைப்படங்களில் சிறந்த நடிகையாக வலம் வந்த இவர் 1993 ஆம் ஆண்டு சந்திர பாண்டியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்த அரங்கநாயகனின் மகன். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் கடைசியாக 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜாங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார். மிகக் குறுகிய காலத்தில் மிக பிரபல நடிகையாக வளம் வந்த இவர் சினிமாவிலிருந்து விலகியும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகின்றது. தற்போது வரை இவர் என்ன செய்கிறா,ர் எப்படி இருக்கின்றார் என்று எதுவுமே தெரியாது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் பேசியவர் 30 வருடங்களாக எங்கு இருந்தீர்கள் என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தவர்.

சென்னையில் தான் இருந்தேன் ஆனால் மீடியாவில் இருந்து சற்று விலகி இருந்தேன் என்று கூறியிருந்தார். படங்களில் நடித்தது குறித்து பேசி இருந்த அவர் எனக்கு மலையாளம் தான் தெரியும் என்பதால் முதலில் தமிழ்த் திரைப்படங்களின் நடிப்பதற்கு தடுமாறினேன் எனக்கு வசனங்கள் பெரிதளவில் புரியாது. அப்போது உதவி இயக்குனராக இருந்த சேரன் தான் மிகப்பெரிய உதவியாக இருந்தார்.

அவர் தான் எனக்கு கஷ்டப்பட்டு வசனங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார் என்று கூறிந்தார். மேலும் சேரன் பாண்டியன் திரைப்படத்தில் நடித்தபோது விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவுக்கு மகளாக நடித்திருந்தேன், உண்மையில் அவர்கள் என்னை மகள் போல தான் பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு அன்பாக என்னிடம் நடந்து கொண்டார்கள் என்று பல விஷயங்களை பேசி இருந்தார்.. இந்த பேட்டியானது தற்போது வைரலாகி வருகிறது

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

31 நிமிடங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

1 மணி நேரம் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

15 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

15 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

15 மணி நேரங்கள் ago

திருமணத்திற்கு பின்பும் கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் தடையற தாக்க என்ற…

16 மணி நேரங்கள் ago