70 ஆண்டுகள் ஆனாலும் திமுகவுக்கு தமிழகத்தில் இடமில்லை… ஒரே போடாய் போட்ட இபிஎஸ்….!

By Srimathi on ஆவணி 4, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே நெல்லையில் விவசாயிகள் கட்டடத் தொழிலாளர்கள் வியாபாரிகளுடன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், தற்போது ஷிப்ட் முறைப்படி விவசாயிகளுக்கு மும்முனை  மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி அமைத்தவுடன் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்.

சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, அதிக மானியம் பெற்று கொடுத்ததாகவும் கூறினார். அதிமுக ஆட்சி அமைத்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவைக்கப்படும். யாரும் குறை கூறாத அளவிற்கு சிறப்பான ஆட்சி அமையும். ஏழாவது முறையாக மட்டுமல்லாமல் இன்னும் 70 ஆண்டுகள் ஆனாலும் திமுகவிற்கு தமிழகத்தில் இடமில்லை எனவும் சாடினார். தமிழக மக்கள் ஏற்றம்  பெறும் வரை நான் ஓய்வதில்லை என்று இபிஎஸ் சூளுரைத்துள்ளார்.