#image_title
கல்வி கண் போன்றது, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே, வேறு எந்த சொத்து இருந்தாலும் நம்மை விட்டு சென்றுவிடும் நாம் படித்த கல்வி அறிவு ஆனது கடைசி வரை நம்முடன் வரும் என்று பலமொழிகள் கல்வியை பற்றி கூறுவர். பலர் கல்வியின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பர். தங்களுக்கென்று வாழ்நாள் லட்சியம் வைத்துக் கொண்டு படிப்பவர் இருக்கிறார்கள்.
ஒரு சிலர் வயதானாலும் சரி தனது லட்சியத்திற்காக போராடிக் கொண்டே இருப்பவர்களும் உண்டு. தற்போதைய காலகட்டத்தில் படிப்புக்காகும் செலவு கூட அதிகம் தான். ஆனால் நல்ல மதிப்பெண்களும் தேர்வுகளையும் கிளியர் செய்தால் அது கொஞ்சம் குறைக்கலாம். இதுபோல இளம் வயதில் தான் கொண்ட கனவை முதுமையானாலும் அதை விடாமல் பிடித்து நிறைவேற்றி இருக்கிறார் 64 வயதாகும் நபர்.
ஒடிசாவை சேர்ந்தவர் ஜெய் கிஷோர் பிரதான். இவருக்கு வயது 64. எஸ் பி ஐ வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளம் வயதில் மருத்துவராக வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார் ஜெய்கிஷோர். காலம் ஓடிப் போக பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நீட் தேர்வை எழுதி எப்படியாவது மருத்துவராக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார் ஜெய்கிஷோர். குடும்பத்தார் அக்கம் பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தனது முடிவில் உறுதியாக இருந்து நீட் தேர்வுக்கான பயிற்சியை எடுத்துக் கொண்டிருந்தார் ஜெய் கிஷோர். விடாமுயற்சியுடன் பரிட்சைக்கு தயார் செய்து வந்த ஜெய் கிஷோர் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மருத்துவக் கல்லூரியில் தற்போது மருத்துவம் படிப்பதற்கு சேர்ந்திருக்கிறார் ஜெய் கிஷோர். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல விடாமுயற்சியும் ஆர்வமும் இருந்தால் போதும் என்பதற்கு சான்றாக 64 வயதாகும் கிஷோர் இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்ல ஒரு முன்மாதிரியாகவே இருக்கிறார்.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…