தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… “சாப்பாடு போட வந்த இடத்தில் காம லீலை”.. கோவையில் 60 வயது யோகா ஆசிரியர் செய்த பகீர் காரியம்…!

Spread the love

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான புகார்களை எழுப்பி வருகின்றன. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதாகக் கூறி, தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின் மீதும், முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதும் அரசியல் தலைவர்கள் தங்களின் கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர். மேடைகளில் மட்டுமே பேசும் முதலமைச்சர், தன் கண்முன்னே நடக்கும் இத்தகைய குற்றங்களைக் கண்டும் மவுனம் காப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, இந்த விவகாரத்தை அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பாக மாற்றியுள்ளன.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் சென்னை மெரினா வரை ஒரே நாளில் மட்டும் 10 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகள் காவல்துறையின் மீது எந்தவித பயமும் இல்லாமல் சுதந்திரமாகத் திரிவது இந்த தவெக அரசின் நிர்வாகத் தோல்வியையே அப்பட்டமாகக் காட்டுகிறது என்று சாடிய அவர், இனியாவது முதல்வர் தனது மவுனத்தைக் கலைத்து காவல்துறையைத் தட்டி எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் இந்த அறிக்கை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் மற்றுமொரு அதிர்ச்சிகரமான பாலியல் அத்துமீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த 60 வயதான அருணன் என்பவர், இப்பகுதியில் இன்சூரன்ஸ் ஏஜெண்டாகவும், யோகா ஆசிரியராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தன் தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சமையல் செய்ய நேரமில்லாததால், அந்த இளம்பெண்கள் அருணன் வீட்டில் மாதக்கட்டணம் செலுத்தி தினமும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

வழக்கம்போல தோழிகள் வேலைக்குச் சென்ற நிலையில், நேற்று காலை உணவு சாப்பிடச் சென்ற அந்த இளம்பெண்ணின் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, யோகா ஆசிரியர் அருணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட முதியவரிடமிருந்து தப்பிக்க அந்த இளம்பெண் பயத்தில் அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்த யோகா ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்து இளம்பெண்ணை மீட்டனர். இது குறித்து ஆலாந்துறை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணனை அதிரடியாகக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி… தூங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

பங்களாதேஷில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு, இறுதியில் கணவனின் உறுப்பை மனைவி துண்டித்த கொடூர சம்பவத்தில்…

3 seconds ago

60 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை… தமிழக அமைச்சரவையில் மாற்றம்?…. அந்த 7 பேருக்கு கல்தா…. விஜய் கையில் இருக்கும் அந்த ரகசிய லிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய திருப்பமாக, தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக…

2 minutes ago

“5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்”…. 200 பேருந்துகள், 7 மணி நேரப் பயணம்… அதிமுக காலி?… ஒரே நாளில் தவெக-வில் இணையும் 100 முக்கிய தலைவர்கள்… செம குஷியில் விஜய்…!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…

12 minutes ago

நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…

17 minutes ago

தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலை வீசிய யூடியூபர்: நடுராத்திரியில் நடந்த அதிரடி கைது.. பின்னணியில் இருக்கும் அந்த ‘பெரிய கை’…. அலறும் அரசியல் வட்டாரம்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…

18 minutes ago

“என் மனைவி, மகளை நானே கொன்றேன்”…. தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி… தொழிலதிபர் வெளியிட்ட பகீர் வீடியோ… தர்மபுரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!

தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…

30 minutes ago