BREAKING: “6 முதல் 7 மணி நேரம்” இரவில் விஜய்க்கு அதிர்ச்சி…!!

By Soundarya on தை 13, 2026

Spread the love

கரூரில் கடந்த 2025 செப்டம்பரில் நடைபெற்ற அரசியல் மாநாட்டின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ  தலைமையகத்தில் ஆஜரானார். சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த முதற்கட்ட விசாரணையில், மாநாட்டிற்கு அவர் தாமதமாக வந்ததற்கான காரணங்கள் மற்றும் கூட்ட மேலாண்மை குறித்த சுமார் 100 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

சிபிஐ அதிகாரிகள் இன்றும் விசாரணையைத் தொடர விரும்பிய நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ, வரும் ஜனவரி 19 அன்று மீண்டும் ஆஜராகுமாறு அவருக்குப் புதிய சம்மன் அனுப்பியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு இடைப்பட்ட இந்த நாட்களில், அடுத்தகட்ட விசாரணையை எதிர்கொள்வது குறித்து விஜய் தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.