பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியரின் கவனக்குறைவால் 6 மாதக் குழந்தையின் விரல் நுனி துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்த விஜயகுமார் – பிரியதர்ஷினி தம்பதியினர், தங்கள் 6 மாதக் குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள சின்மயா மிஷன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, குழந்தையின் கையில் பொருத்தப்பட்டிருந்த கேனுலா (Cannula) மற்றும் அதன் கட்டுகளை அகற்றுவதற்காக ஒரு செவிலியர் வந்துள்ளார். அப்போது அவர் கத்தரிக்கோலைப் பயன்படுத்தியபோது, கவனக்குறைவாகக் குழந்தையின் விரல் நுனி துண்டிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறியழுத நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை விஜயகுமார் இந்திரா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செவிலியரின் அலட்சியப்போக்கு மற்றும் மருத்துவமனையின் பாதுகாப்பின்மை குறித்து அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பணியில் இருந்த செவிலியர் உட்பட மூன்று மருத்துவமனை ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது துண்டிக்கப்பட்ட விரல் நுனி அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததா என்பது 15 நாட்களுக்குப் பிறகே தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம், மருத்துவமனைகளில் ஊழியர்களின் பொறுப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர்…
வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலைந்துவிடாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…
ஆளி விதை நீர்: தயாரிக்கும் முறையும் ஆரோக்கியத் தொடக்கமும் ஆளி விதைகள் மட்டுமின்றி, அதன் நீரும் உடல் நலத்திற்கு ஒரு…
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட திடீர்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ஒரு…