இமாச்சலப் பிரதேசம் பஞ்ச்ராரு-ஷாவா-பதக்வாஸ் சாலையில் நடந்த ஒரு பயங்கர விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளார்கள். நேற்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மலையிலிருந்து ஒரு பெரிய பாறை விழுந்ததால் கார் உருண்டு 500 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதனையடுத்து விபத்தில் சிக்கியவர்கள் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் கிராம மக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கிராம மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை மேற்கொண்டார்கள். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதனையடுத்து இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
