#BREAKING: ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி..!!

By Soundarya on பங்குனி 2, 2026

Spread the love

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வரும் தீவிர வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஈரான் ரெட் கிரசென்ட் சங்கம் (Iranian Red Crescent) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்நாட்டின் 131 நகரங்கள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் பெண்கள் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் சுமார் 115 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீட்புப் பணியாளர்களும், சுமார் 40 லட்சம் தன்னார்வலர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.