ரூ.5,000 கோடி மின்சார ஊழல்…. TNEB ஆவணங்களைக் கைப்பற்றிய DVAC… மீண்டும் சிக்கும் செந்தில் பாலாஜி?… திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி….!

By Nanthini on ஆவணி 21, 2026

Spread the love

தமிழக மின்சார வாரியம் மூலம் மின்சாரத் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி ஆவணங்களைத் தயாரித்து, மிக அதிக விலைக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ.5,000 கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை தனது முதற்கட்ட விசாரணையை தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

இதற்காக மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியமான கொள்முதல் ஆவணங்களைக் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், இந்த முறைகேடுகள் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் பட்சத்தில், ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சட்டரீதியான நெருக்கடிகள் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.