மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகே உள்ள வக்கீல் புதூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வகுமார். இவர் மகள் பொன் ரூபினி. 17 வயதான இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய பெரியம்மா செல்வராணியுடன் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு சாலையோரம் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் அதை திறந்து பார்த்தபோது அதில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் அந்த மாணவியும் அவருடைய பெரியம்மாவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இதனை அடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினர் அந்த பணத்தை சரிபார்த்த போது அதில் 17 லட்சத்தி 49 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. அந்த பணம் யாருடையது? எதற்காக சாலையில் வீசி சென்றார்கள்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட்ட அந்த மாணவி ரூபிணிக்கும் அவருடைய பெரியம்மா செல்வராணிக்கும் போலீசார் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…