உயிரிழந்த தந்தை, மயக்கமடைந்த தாயுடன் இரவு முழுவதும் காட்டில் தனியாக இருந்த 5 வயது சிறுவன்… அதிகாலையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

ஒடிசாவில் இறந்த தந்தை, மயக்கம் அடைந்த தாயுடன் இரவு முழுவதும் குளிரில் வனப்பகுதியில் ஐந்து வயது சிறுவன் தனியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த மஜ்ஹி மற்றும் ரிங்கி மஜ்ஹி தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளனர். இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று அங்கு தம்பதியினர் விஷம் அருந்தியதாக தெரிகிறது.

இதில் தந்தை உடனே உயிரிழந்த நிலையில் தாய் மயக்கம் அடைந்துள்ளார். பிறகு அவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ஆனால் ஐந்து வயது சிறுவன் இரவு முழுவதும் வனப்பகுதியில் குளிரில் தனியாக இருந்துள்ளான். பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோரம் சென்றவர்களிடம் உதவி கேட்டபோது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்றோர்களால் பூச்சிக்கொல்லி மருந்து கொடுக்கப்பட்ட போதிலும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான். சிறுவன் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன. முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் தனது தாத்தா பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

3 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

3 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

5 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago