பள்ளியா? மதுபானக் கடையா?… குடிபோதையில் உளறிய 4 ஆம் வகுப்பு மாணவன்… பள்ளிக்குள் 204 லிட்டர் சரக்கு பறிமுதல்… பீகாரையே அதிரவைத்த பகீர் சம்பவம்…!!!

Spread the love

பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள போதிலும், அண்டை மாநிலங்களில் இருந்து மது கடத்தப்படுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதன் கோர விளைவாக, கடந்த வாரம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் தங்கள் கண்பார்வையை இழந்தனர். இந்தச் சோகம் மறைவதற்குள், பெகுசராய் மாவட்டத்தில் உள்ள சிஸ்வா அரசுப் பள்ளியில் பயன்படுத்தப்படாத கழிப்பறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் மதுவை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வர ஒரு சிறுவனே காரணமாக இருந்துள்ளான். அந்தப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன், திங்கள்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்குத் தடுமாறியபடி குடிபோதையில் சென்றுள்ளான். மாணவனின் விசித்திரமான பேச்சைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது, பள்ளிக் கழிப்பறையில் இருந்த மதுவை தான் அருந்தியதாக அந்தச் சிறுவன் ஒப்புக்கொண்டான். போதை தலைக்கேறிய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது நலமடைந்துள்ளான்.

பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர் கழிப்பறையைச் சோதனை செய்தபோது, அங்கு 23 அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. மதுவிலக்கு அமலில் உள்ள ஒரு மாநிலத்தில், மாணவர்களின் கல்விக்கூடத்தையே மதுபானக் கிடங்காகப் பயன்படுத்திய சமூக விரோதிகளின் செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பச்வாரா போலீசார், இந்தப் பின்னணியில் உள்ள நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“மத்திய அமைச்சர் பதவி கொடுத்தா அதிமுகவை பாஜகவிடம் விற்றுவிடுவார்”.. எடப்பாடியை அசிங்கப்படுத்திய தவெக நிர்மல் குமார்..!!

அதிமுக தலைமையின் மீதான கடுமையான நம்பிக்கையின்மையால் தான், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்களை மாற்றிக்கொண்டு தானாகவே தவெகவில் இணைந்து வருவதாக…

11 minutes ago

“டெல்லியை உலுக்கும் மெகா புரட்சி.. ‘காக்கரோச் ஜனதா கட்சி’ போராட்டத்தில் குதித்த AISA மற்றும் SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி”..!

நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…

32 minutes ago

“சச்சினின் 36 ஆண்டுகால அசுர சாதனை அவுட்.. இந்திய கிரிக்கெட்டை ஆள வந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.. பிசிசிஐ-யின் அன்லிமிடெட் அதிரடி பிளான்..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…

42 minutes ago

“ரயில்வே சாப்பாட்டுல இனிமேல் இந்த தப்பு நடக்காது.. ஏஐ தொழில்நுட்பத்தின் மாஸ் என்ட்ரி.. ஐஆர்சிடிசி-யின் அதிரடி ஆக்ஷன்”..!!

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…

57 minutes ago

முதியவர்களுக்கே இந்த நிலையா..? வீட்டிற்குள் புகுந்து 60 வயது.. மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்.. மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…

1 மணத்தியாலம் ago

“அன்று விஜய்யை 3 மணி நேரம் அலையவிட்ட அமைச்சர்!.. இன்று தவெக வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்த கொடூரம்.. காலம் கொடுத்த மரண அடி”..!!

தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…

1 மணத்தியாலம் ago