ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி! பிரியாணி + தர்பூசணி தான் காரணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவரின் அதிரடி விளக்கம்..!!

By Swetha on வைகாசி 22, 2026

Spread the love

சமீபத்தில் மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பிரியாணி மற்றும் தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பிறகு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரியாணி சாப்பிட்ட உடனே தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டதே இந்த மரணங்களுக்குக் காரணம் என்றும், இவ்விரு உணவுகளையும் ஒன்றாகச் சாப்பிடுவது உடலுக்கு விஷமாக மாறிவிடும் என்றும் பல தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் வேகமாகப் பரவத் தொடங்கின.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணம் குறித்து மருத்துவ நிபுணர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இந்த மரணங்கள் பிரியாணி மற்றும் தர்பூசணி ஆகிய உணவுகளைச் சேர்த்து சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தடயவியல் மற்றும் காவல்துறையினரின் தீவிர விசாரணையில், அவர்கள் உட்கொண்ட தர்பூசணி பழத்தில் எலி மருந்து (Zinc phosphide) கலந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

   

https://www.instagram.com/reel/DYl6e_6iQ0a/?utm_source=ig_web_copy_link

   

தற்போது காவல்துறையினர் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பிரியாணி மற்றும் தர்பூசணி ஆகிய இரண்டு உணவுகளையும் அடுத்தடுத்து சாப்பிடுவதால் மனிதர்களுக்கு இதுபோன்ற எந்தவொரு உயிருயிரான ஆபத்தும் ஏற்படாது என்றும், பொதுமக்கள் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவர் விளக்கமளித்துள்ளார். இந்த விழிப்புணர்வு காணொளி தற்போது இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.