“வெள்ளை உடை அணிந்த வேட்டைக்காரன்”… பெண் மருத்துவருக்கு விரித்த 25 லட்ச ரூபாய் வலை… உள்ளாடைக்குள் மறைக்கப்பட்ட கேமரா?.. அம்பலமான ரகசியம்…!!

By Rajeshwari on பங்குனி 22, 2026

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் ராஜ்கோட்டில் மருத்துவத்துறையையே அதிரவைக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், தனது சக பெண் மருத்துவருக்குத் தெரியாமல் அவர் குளிப்பதையும் மற்ற அந்தரங்க தருணங்களையும் ரகசியமாகப் படம் பிடித்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோக்களைக் காட்டி, அந்தப் பெண் மருத்துவரை மிரட்டி ரூ. 25 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

   

இதனால் காவல்துறையினர் நடத்திய சோதனையில், சம்பந்தப்பட்ட மருத்துவரின் மின்னணு சாதனங்களில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த மருத்துவர் தனது சக பெண் ஊழியர்கள் பலரை இதேபோல் ரகசியமாகப் படம் பிடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

   

இந்நிலையில் கைதான மருத்துவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சக ஊழியரால் ஒரு பெண் மருத்துவருக்கே இந்த நிலை நேர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.