தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் தேர்தலுக்கான தனது கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், பெண்களின் நலனுக்கான அறிவிப்புகள் அதில் பிரதானமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கான ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ₹2,500 வழங்குவது மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ₹3,000-ஆக உயர்த்துவது போன்ற முக்கிய வாக்குறுதிகளை அவர் வெளியிடக்கூடும் எனத் தகவல்கள் கசிகின்றன.
மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை மற்றும் கடன் சுமை குறித்த முழுமையான தரவுகளை ஆய்வு செய்த பிறகு, இந்தப் பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வமான ‘இனிப்பான செய்தியை’ அவர் வெளியிடுவார் என்று கூறப்படுவதால், இது தமிழகப் பெண்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
