தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் அஜித் கூடிய விரைவில் இப்படத்தின் பைனல் ஷேடுலுக்காக அஜர்பைஜானுக்கு செல்ல இருக்கின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆதித் ரவிச்சந்திரன் உடன் சேர்ந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார்.
இந்நிலையில் இன்று தமிழக முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. காலை 7:00 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வந்து தனது வாக்கை செலுத்தி இருக்கிறார் நடிகர் அஜித். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.