கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ரூபினி. இவருடைய கணவர் பால்ராஜ். இந்த தம்பதிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக ரூபிணி தன்னுடைய கணவரை பிரிந்து மூன்று வயது குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே ரூபிணிக்கும் சற்குணம் என்பவருக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு தனிமையில் சந்திப்பதற்காக சென்று இருந்த நிலையில் 3 வயது குழந்தையையும் ரூபிணி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனிமையில் இருக்க குழந்தை இடையூறாக இருப்பதாக நினைத்து பிஸ்கட்டில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்த நிலையில் இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் குழந்தையை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
