தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் லஞ்சத்தை ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்த முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். “அரசுப் பணத்தில் ஒரு ரூபாயைக் கூடத் தொட மாட்டேன்” என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவரது நேர்மையான வழியையே தற்போதைய அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பின்பற்றி வருவதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
முன்பு எந்தெந்த அரசுத் துறைகளில் எல்லாம் லஞ்சம், ஊழல் மலிந்து காணப்பட்டதோ, அவை அனைத்தையும் கண்டறிந்து அடுத்த 3 மாத காலத்திற்குள் முற்றிலுமாக அகற்றுவோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தங்களின் அரசிடம் உள்ள உறுதியான திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லஞ்ச ஒழிப்பிற்கான இந்த 3 மாத காலக்கெடு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
