தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டே மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் தக்க வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதேசமயம் மற்றொரு பக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.
ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதேசமயம் சமீபத்தில் அதிமுகவிலிருந்து மூத்த நிர்வாகி செங்கோட்டையன் நீக்கப்பட்டது மேலும் பரபரப்பு கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் விலகிய நிலையில் அவர்களை சமாதானம் செய்யும் வேலையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தொலைபேசி மூலம் சமாதானம் செய்த நயினார் நாகேந்திரனிடம் ஓபிஎஸ் பிடி கொடுக்காமல் பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் TVK உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று அவர் பதிலளித்துள்ளார். ஏற்கனவே விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என டிடிவி தினகரனும் கூறி இருந்தார். இதனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் இணைந்து விஜயுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது இபிஎஸ்க்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
சமைக்காத சிக்கனில் சால்மோனெல்லா, கேம்பிலோபாக்டர் போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றைத் தண்ணீரில் கழுவுவதால் கிருமிகள் அழிவதில்லை; மாறாக, குழாய்…
தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், வீட்டு மின் நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்…
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், மிகக் குறைந்த விலையில் தினசரி 3 GB டேட்டா வழங்கும் அதிரடி…
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவரும் முதல்வருமான…
திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துமாலை (35) என்ற பெண், இரு மர்ம…
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்டி பகீரத் மீது ஹைதராபாத் சைபராபாத் காவல் துறையினர் போக்சோ…