கர்நாடகாவில் கடந்த வருடம் பாராளுமன்ற தேர்தலையொட்டி பரபரப்பான பரப்புரைக்கு மத்தியில் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது. பிறகு அவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை மிஞ்சும் விதமாக பெங்களூர்வில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பெங்களூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியரும், கிரிக்கெட் பயிற்சிளருமான ஏபிவி மேத்யூ என்பவர் பெண்கள் மற்றும் இளம் பெண்களோடு உல்லாசமாக இருந்த காட்சிகளை வீடியோவாக எடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் 2500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை இருப்பதாகவும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதனையடுத்து மேத்யூ தலைமுறைவாகியுள்ளார். பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் மேத்யூ தலைமறைவானதால் அவரை தேடி வருகிறார்கள் போலீசார்.
