இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… NTPC-யில் 250 காலிப்பணியிடங்கள்.. சம்பளம் ரூ.55,000… உடனே விண்ணப்பியுங்கள்…!!!

Spread the love

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி (NTPC Limited), தற்போது 250 அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் (Assistant Executive) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களுடன் B.E. அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 40 மெகாவாட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு வருட கால பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 07.05.2026 தேதியின்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்; எனினும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. தகுதியுள்ள நபர்கள் கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் நேர்காணல் (Interview) ஆகிய இரண்டு கட்ட சோதனைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.55,000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு வரும் மே 7, 2026 அன்று முடிவடைகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள என்டிபிசி மையங்களில் பணியாற்ற விரும்பும் பொறியியல் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

Muthu Mani

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

6 மணத்தியாலங்கள் ago