கொச்சி கடற்படையில் 240 அப்ரண்டீஸ் பணியிடங்கள்… ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on சித்திரை 1, 2026

Spread the love

கொச்சியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேவல் ஷிப் ரிப்பேர் யார்டு (Naval Ship Repair Yard – NSRY) மற்றும் நேவல் ஏர்கிராப்ட் யார்டு (Naval Aircraft Yard – NAY) ஆகியவற்றில் 240 அப்ரண்டீஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐ.டி.ஐ (ITI) முடித்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிட விவரங்கள்:

   

பணி: அப்ரண்டீஸ் (Trade Apprentice – ITI Holder)

   

மொத்த பணியிடங்கள்: 240

 

முக்கிய தொழிற் பிரிவுகள் (Trades): பிட்டர் (Fitter), கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (COPA), எலக்ட்ரீஷியன் (Electrician), வெல்டர் (Welder – Gas & Electric), எலக்ட்ரானிக் மெக்கானிக், மெஷினிஸ்ட், டர்னர், பெயிண்டர், பிளம்பர் மற்றும் பிற தொழில்நுட்பப் பிரிவுகள்.

கல்வித்தகுதி:

10-ம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI/NCVT) தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். (வயது தளர்வு அரசு விதிகளின்படி பொருந்தும்).

தேர்வு முறை:

ஐ.டி.ஐ மற்றும் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் (Merit List) தகுதியானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

பின்னர் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் இறுதித் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை (Offline):

www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்