உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் கோபால்பூர் கிராமத்தில் ரஜினி குமாரி என்ற 21 வயது பெண் கணவர் சச்சின் உடன் வசித்து வந்துள்ளார். இந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை கணவரும் அவருடைய உறவினர்களும் ஐந்து லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.
அது நிறைவேறாததால் அவர்கள் நேற்று முன்தினம் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்து உள்ளார். பிறகு ஆதாரங்களை அளிக்கும் நோக்கத்தில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து குடும்பத்தோடு சேர்ந்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் தாயார் உடனே போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
