பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… பதறி அடித்து ஓடிய பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பூங்காவில் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற இரண்டு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பூங்காவில் உள்ள மின்கம்பங்களில் இருந்து மின்சாரம் தாக்கியதில் குழந்தை தூக்கி வீசப்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அந்த பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் மின்சார முழுவதும் துண்டிக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பூங்காவில் உள்ள அனைத்து மின்கம்பங்களிலும் உபகரணங்கள் உடைந்த நிலையில் காட்சி அளிக்கின்றது. தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.