டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…! பாதுகாப்பு துறையில் 1,871 காலி பணியிடங்கள்… ரூ.1,00,000 வரை சம்பளம்…. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2026

Spread the love

பாதுகாப்புத் துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பணியாளர் தேர்வாணையம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 1,871 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இதில் இடம் பெற்றுள்ளது.

ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 20 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும்.

   

இந்த அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள ஆர்வலர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமானssc.gov.in மூலம் வரும் செப்டம்பர் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.