டெக்ஸ்டைல், ஹோட்டல் முதல் ஏர்லைன் வரை.. டாடா குழுமத்தின் 150 ஆண்டு கால வளர்ச்சி பற்றி தெரியுமா..? பலரும் அறியாத தகவல்கள்..

Spread the love

டாடா குழுமம் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் செயல்பாட்டை சுதந்திரத்திற்கு முன்பு, சுதந்திரம் கிடைத்ததில் இருந்து 1991-ஆம் ஆண்டு வரை, 1991-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது வரை எனும் மூன்று சூழல்களாக பிரிக்கலாம். கடந்த 1968 ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி நுஸ்சர்வான்ஜி டாடா 21,000 முதலீட்டில் டாடா குழுமத்தை தொடங்கினார்.

முன்னதாக 1874-ஆம் ஆண்டு டெக்ஸ்டைல் மில், 1903-ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல், 1907-ஆம் ஆண்டு டாடா ஸ்டீல், 1910-ஆம் ஆண்டு மின்சாரம், 1917-ஆம் ஆண்டு நுகர் பொருட்கள், 1932-ஆம் ஆண்டு டாடா ஏர்லைன் என அடுத்தடுத்த தொழில்களை தொடங்கி டாடா குழுமம் வெற்றி கண்டது.கடந்த 1953-ஆம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்டதால் விமான போக்குவரத்து துறையில் டாடா குழுமத்தால் பல ஆண்டுகள் செயல்பாட்டை தொடங்க இயலவில்லை.

இதே போல கடந்த 1977-79 ஆண்டுகளுக்கு இடையே டாடா ஸ்டீல் நிறுவனத்தை தேசியமயமாக்கும் திட்டத்தை அப்போதைய அரசு திட்டமிட்டது. ஆனால் ஸ்டீல் நிறுவனங்களை இணைத்து பொதுத்துறை நிறுவனமாக்கி அதற்கு ஜே.ஆர்.டி டாட்டாவை தலைவராக நியமனம் செய்ய அரசு திட்டமிட்டது. ஆனால் டாடா ஸ்டீல் தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு டாடா ஸ்டீல் நிறுவனத்தை தேசிய மையமாகும் நடவடிக்கையை அரசு நிறுத்தியது.

தொழில் மட்டும் இல்லாமல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (பெங்களூரு), டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (மும்பை), டாடா இன்ஸ்டியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் (மும்பை), டாடா மெமோரியல் சென்டர் (மும்பை) என பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை தொடங்கியது. மேலும் விளையாட்டு துறையிலும் அகாடமிகளை உருவாக்கி வீரர்களை உருவாக்கியது.

டாடா உலகின் முக்கியமான குழுமமாக இருக்கும் டாடாவை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் அதிக பங்குகளை வைத்திருப்பவர்கள் என யாருமே இல்லை. டாடா சன்ஸ் என்னும் நிறுவனம்தான் டாடா குழும நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பிரத்தியேக தலைமை செயல் அதிகாரிகள் தலைவர்கள் வழி நடத்தினாலும் டாட்டா சன்ஸ் எடுக்கும் முடிவுதான் உறுதிப்படுத்தப்படும்.

admin

Recent Posts

ஸ்டாலின் கோட்டையில் விஜய்… அதிமுகவுக்கு 3-வது இடமா?… கொளத்தூரில் ‘கிங்’ யார்?… தந்தி டிவி கணிப்பில் வெளியான பகீர் தகவல்கள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.…

4 minutes ago

சர்ப்ரைஸ் விசிட்…! சசிகலாவுக்காகக் களமிறங்கிய நவரச நாயகன்…. கார்த்திக்கின் எனர்ஜியைப் பார்த்து மிரண்ட வேட்பாளர்கள்… அனல் பறக்கும் பிரச்சாரம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…

22 minutes ago

எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்…. அண்ணாமலையை ஓரங்கட்டியதா டெல்லி….? பியூஷ் கோயல் அதிரடி பதில்…!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…

33 minutes ago

வாக்காளர்களுக்கு ரூ.5000 லஞ்சம்…? டாஸ்மாக் கொள்ளைப் பணத்தை வீசும் திமுக…! வானதி சீனிவாசன் ஆவேசம்…!!

கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…

42 minutes ago

தோனிக்கு அடுத்து இவரா…? காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய மாத்ரே…. கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…

50 minutes ago

“பாமக-வுக்கு ஓட்டு போடாதீங்க…தந்தையாக நான் செத்துவிட்டேன்!” தேர்தல் களத்தில் வெடித்த தந்தை – மகன் போர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…

59 minutes ago