Connect with us

கல்யாணத்து மட்டும் 50 கோடி… கைமாறும் 100 கோடி வரதட்சணை – வரலட்சுமி கணவரின் பின்னணி என்ன?

CINEMA

கல்யாணத்து மட்டும் 50 கோடி… கைமாறும் 100 கோடி வரதட்சணை – வரலட்சுமி கணவரின் பின்னணி என்ன?

 

தமிழ் சினிமாவின் இப்போது இருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவருக்கும் அவரின் முதல் மனைவி சாயா சிங்குக்கும் பிறந்தவர் தான் வரலட்சுமி சரத்குமார். போடா போடி என்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதை தொடர்ந்து தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தாரதப்பட்டை, விக்ரம் வேதா, சர்தார், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கின்றார். தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் கடைசியாக வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஹனுமன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

   

இவர் தனது நீண்ட நாளாக காதலித்து வந்த நிக்கோலய் சச்சுதேவ் விரைவில் கரம் பிடிக்கவுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இவரின் நிச்சயதார்த்தம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக மும்பையில் நடந்தது. இந்நிலையில் அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக தாய்லாந்தில் நடக்க உள்ளது. இந்த திருமணத்துக்காக மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல மணமகனுக்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வரதட்சனையாக வழங்கப்பட வுள்ளதாம். மேலும் வரலட்சுமி சம்பாதித்துள்ள சொத்துகளும் அவரது சொத்துகளோடு இணையவுள்ளன. இந்த அளவுக்கு செலவு செய்து மகளுக்கு சரத்குமார் திருமணம் செய்து வைப்பதற்கு மகளை மணக்கவுள்ல நிக்கோலய் மத்திய அரசுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் மணமக்கள் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்து திருமணப் பத்திரிக்கையைக் கொடுத்து வாழ்த்துகளைப் பெற்றனர்.

ஏற்கனவே தன்னுடைய கட்சியை பாஜகவில் இணைத்துவிட்ட சரத்குமார் அதில் முக்கியப் பதவிகளை எதிர்பார்த்துள்ளார். சமீபத்தில் நடந்த தேர்தலில் ராதிகாவுக்கு சீட் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top