தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராய வேலூர் பகுதியில் வசித்து வரும் 15 வயது பள்ளி மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலகோம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியை அதே ஊரை சேர்ந்த 52 வயது பிச்சைமணி என்பவர் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி தன்னுடைய வலையில் சிக்க வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மற்றொரு பதற வைக்கும் விஷயம் என்னவென்றால் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த காட்சிகளை அங்குள்ள 16 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய மொபைல் போனில் ரகசியமாக பதிவு செய்துள்ளான். அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அந்த சிறுவனும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிறுமியை தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மகளிடம் விசாரித்ததில் நடந்த உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து தாய் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை ஏமாற்றி உறவு கொண்ட பிச்சை மணியையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…