டெல்லியில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரோகினி பகுதியில் நடந்த இந்த தாக்குதல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோஹினி பகுதியில் வசிக்கக்கூடிய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பள்ளியின் மாணவிகள் நான்கு பேர் அவரை எதிர்த்து நின்று தாக்கியுள்ளனர். அந்த மாணவியை பிளேடால் கீறியதால் முகம் மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனையில் காயமடைந்த இடங்களில் 20 தையல்கள் போடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவி தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கும் தாக்குதல் நடத்திய மாணவிக்கும் இடையே ஒரு மாணவனுடன் பேசியதற்கான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேலி மற்றும் கிண்டல் நிலை அதிகரித்து அது ஒரு கட்டத்தில் தாக்குதலாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் 16 வயதுடைய இரண்டு மாணவிகள் மற்றும் 14 வயது மாணவி தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மூன்று பேரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் இடையில் அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…