“ஒரே முறைதான், ஆனா ரூ.10,000″… எடப்பாடியின் அதிரடி விளக்கத்தால் தலைசுற்றிப்போன தமிழகம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்?…!!!

By Rajeshwari on மாசி 25, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை அக்கட்சி அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்த உதவித்தொகையானது அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரே ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்றும், இது ஆண்டுதோறும் வழங்கப்படும் திட்டம் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த உதவித்தொகை எதன் அடிப்படையில், யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

   

இருப்பினும், தகுதிகள் குறித்து தெளிவான நிபந்தனைகள் அறிவிக்கப்படாததால், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த ₹10,000 வழங்கப்படலாம் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு ஒரு முக்கிய மைலேஜாகப் பார்க்கப்படுகிறது.