தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது ₹888 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஓராண்டில் ஒரே ஒரு துறையில் மட்டும் சுமார் ₹2,300 கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வேலை வாய்ப்புகளில் லஞ்சம் (₹888 கோடி), டெண்டர் முறைகேடுகள் (₹1,020 கோடி) மற்றும் இடமாற்றங்களுக்கான லஞ்சம் (₹365.87 கோடி) எனப் பல நிலைகளில் இந்த ஊழல் அரங்கேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமலாக்கத்துறை (ED) ஆதாரங்களுடன் கடிதங்களை அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இவ்வளவு பெரிய ஊழல் முறைகேடுகள் முதல்வரின் கவனத்திற்கு வராமலேயே நடந்திருக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் புகார்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, உடனடியாக மற்ற ஊழல் புகார்களிலும் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…