கொரோனா காலம் நமக்கு பல வாழ்வியல் யதார்த்தத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அரசு திடீரென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுண் போட்டு வருவதால் உண்மையில் ரொம்பவே கஷ்டப்படுவது சாலையோரவாசிகள் தான்.
சொந்தமாக வீடு இல்லாத அவர்கள் சாலையோரம் இருப்பார்கள். அந்தப்பக்கமாக போய், வருபவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துதான் உணவு சாப்பிட்டு வயிற்றை நிரைப்பார்கள். ஆனால் இப்போது கொரோனா காலம் என்பதால் சாலையோரம் தர்மம் எடுப்போருக்கும் உணவு கிடைப்பதில்லை. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதும் குறைந்திருப்பதால் சாலையோரம் தர்மம் எடுப்போர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதுபோன்றவர்களுக்கு ஆங்காங்கே இருக்கும் இளைஞர்கள் தான் தன்னார்வலர்களாக உணவு கொடுத்து வருகின்றனர். அப்படி, ஒரு இளைஞர் கூட்டம் உணவு கொடுத்துக் கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் அமர்ந்திருந்த பாட்டிக்கு சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கொடுக்க, சாப்பாட்டுக்காக பசியோடு காத்திருந்த பாட்டி, அந்த சாப்பாட்டுக்கு காசு என தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த பத்து ரூபாயை எடுத்தார். இந்தக் காட்சி பார்க்கவே நம் கண்களை குளமாக்குகிறது. இதோ நீங்களே பாருங்களேன். உருகிடுவீங்க..
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…