நீயும் அம்மாவும் சேர்ந்து வாங்க….. வந்து என கூட்டிட்டு போங்க…. குழந்தையின் பாச போராட்டம்…. வைரலாகும் வீடியோ…

By Archana

Published on:

குழந்தை ஒன்று அங்கன்வாடிக்கு செல்வதற்கு அடம் பிடித்து அழுகும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக குழந்தைகளை மூன்றரை வயது இருக்கும்போதே எல்கேஜி என்று அழைத்துக் கொண்டு பள்ளியில் தள்ளி விடுகிறோம். அதுமட்டுமில்லாமல் தற்போது அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளை பெற்றோர்கள் விட்டுவிட்டு செல்கிறார்கள்.

   

அங்கு செல்லும் குழந்தைகள் அனைத்தும் அழுது கொண்டே செல்வது தான் வழக்கம். அங்கு மட்டும் இல்லாமல் குழந்தைகள் அனைவரும் அழுது கொண்டே பெற்றோர்களை பிடித்து இழுத்துக்கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோக்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் முதலில் குழந்தை தனது தாயிடமிருந்து சாப்பாடு பையை வாங்கிக்கொண்டு அங்கன்வாடி மையத்திற்கு செல்கின்றது.

அழுதுகொண்டே சென்ற அந்த சிறுவன் அம்மாவிடம் வேகமாக வந்து தன்னை அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறுகிறான். பின்னர் மீண்டும் உள்ளே சென்று வெளியே வந்து தந்தையிடம் நீங்களும் வந்து அழைத்துக் கொண்டு செல்லுங்கள். இருவரும் என்னை வந்து வேகமாக கூட்டி செல்லுங்கள் என்று அவர் பாசத்துடன் அழுது கொண்டே கூறும் வீடியோவானது பார்ப்பதற்கே சிரிப்பாக உள்ளது.

author avatar
Archana