தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை.. இதை பாருங்க, மனசுல என்ன கஷ்டம் இருந்தாலும் பறந்து போய்விடும்..!

By Archana

Published on:

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை

கோபம், சிரிப்பு, வருத்தம் என எந்த ரியாக்‌ஷனைக் காட்டினாலும் அழகாகத் தெரிவது குழந்தைகள் மட்டும் தான் அதனால்தான் குழந்தைகள் என்றாலே நமக்கு ரசனைக்குரியவர்களாக இருக்கின்றார்கள். ஒரு கூடை நிறையப் பூக்கள் பூத்தாலும் ஒரு குழந்தையின் புன்னகைக்கு ஈடு ஆகாது என்று சொல்வதும் அதனால் தான்! திருவள்ளுவரும் குழல் இனிது..யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல் கேட்காதவர்கள் எனச் சொல்கிறார்.

   

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான்…குழந்தைகளே அழகு.

அதிலும் அவர்கள் தன்னை மறந்து செய்யும் செயல் பேரழகுதானே? இங்கே அப்படித்தான் ஒரு க்யூட்டான குட்ட்டிக் குழந்தை தன் தந்தையின் கை அதன் மீது பட்டதும் தூக்கட்திலேயே சிரிக்கிறது. அதைப் பார்க்கவே ரொம்பவும் ஸ்வீட்டாக இருக்கிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன். வீடியோ இதோ..

 

author avatar
Archana