செல்வம் நிலைக்காமைக்கு பெண்கள் தலையில் வைக்கும் பூவும் ஒரு காரணமாம்..! தப்பித் த வறிகூட இப்படி செய்துவிடாதீர்கள்..!

By Archana

Published on:

பூ எவ்வளவு தான் விலையாக இருந்தாலும் வெளியில் செல்லும் போது பெண்கள் தலையில் பூ சூடாமல் சென்றால் உங்களுக்கு அன்றைய நாளில் திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. தலை நிறைய பூ வைத்து கொள்ளும் பெண்களுக்கு இயற்கையாகவே அழகு கூடி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. பெண்களுடைய அழகிற்கு தங்களது தலையில் வைத்துக் கொள்ளும் பூக்களும் ஒரு காரணமாக இருக்கும். தினமும் வைக்க முடியாவிட்டாலும்,

   

நல்ல நாள், விசேஷம், வெளியில் செல்கிறோம் என்கிற பொழுது நிச்சயம் தலையில் பூச்சூடி கொள்வது எல்லா பெண்களும் விரும்பும் ஒரு விஷயமாகும். தலையிலிருந்த பூவை ஒரு சிலர் வாடுவதற்கு முன்னரே எடுத்து தூக்கி வீசுவது உண்டு. அல்லது குப்பையில் போட்டு விடுவார்கள். இந்த தவறை மட்டும் ஒருபோதும் செய்து விடாதீர்கள். மேலும், பூ வாங்கிக் கொடுக்காத கணவன் மார்களை பெண்கள் மதிப்பதே இல்லை என்கிறது ஒரு ஆய்வு.

பெண்கள் எந்த அளவிற்கு பூ வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அந்தப் பெண்களிடம் எப்போதுமே பணம் புரளும் என்பது ஐதீகம் உள்ளது. தலையில் சூடிய பூ முழுமையாக காய்ந்து போகும் வரை அதை தலையில் இருந்து எடுப்பது என்பது தவறான செயலாகும். அது போல் பெண்களுடைய தலையில் இருக்கும் பூக்கள் வாடுவதற்கு முன்னரே எடுத்து விட்டால் நிச்சயம் கையில் பணமே தங்காது. காய்ந்த பின்னர் எடுத்து தூக்கி குப்பையில் வீசி கொள்ளலாம் அதில் தவறில்லை.

அத்துடன் ஒருவர் கொடுக்கும் பூவை இன்னொருவர் எந்த காரணத்திற்காகவும் வேண்டாம் என்று மறுத்து விடவே கூடாது என்கிறது சாஸ்திரம். அதே போல தலையில் இருக்கும் பூவை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் வைத்துக் கொள்வதும் தவறான செயலாகும்.ஒரு முறை தலையில் வைத்த பூவை எந்த காரணத்தைக் கொண்டும் காய்வதற்கு முன்னர் மீண்டும் எடுத்து விடக்கூடாது என்பது தான் ஐதீகம்.

அப்படி நீங்கள் எடுத்தால் நிச்சயம் உங்கள் கைகளில் பணம் சேர்வது தடைபடும். பூக்களுக்காக செலவு செய்வதற்கு தயங்கினால் ஒரு முழம் பூ கூட வாங்க முடியாத வறுமையான நிலைக்கு தான் நாம் தள்ளப்படுவோம்.

author avatar
Archana