தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக உள்ள ஜார்ஜ் மரியானுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது . தன்நேர்த்தியான காமெடியால் வயிறு குலுக்கச் சிரிக்க வைக்கும் இவர் . கலகலப்பு படம் தொடங்கி, அண்மையில் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் வரை எல்லா படங்களிலும் இப்பொழுது இவர் நடித்து வருகின்றார் .
ஜார்ஜ் மரியான் 1989 ஆம் ஆண்டுலிருந்தே தமிழ் சினிமாவில் நடித்துவருகிறார். அப்போது நாடகத் துறையில் இருந்தார். 2002 ஆம் ஆண்டுவரையே நாடக நடிப்பிலேயே இருந்தார். ஜார்ஜ் மரியானுக்கு ப்ரியதர்ஷனின் காஞ்சிவரம் சினிமாவில் நடித்த போலீஸ் கதாபாத்திரம் தான் சினிமாவில் அவருக்கான மார்க்கெட்டைத் திறந்துவிட்டது.
ஆனாலும் இவர் இதுவரை எளிமையாகவே வாழ்ந்து வருகிறார் இப்பொழுது இவரின் மகன் பிரிட்டோ தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார் ,அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உற்சாகத்தை பெற்றுவருகிறது .,