கில்லி படத்தில் நடித்த கராத்தே ராஜாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா….? எப்படி இருக்காங்க தெரியுமா…? இதோ பாருங்க…!!!

By admin

Published on:

பல வருடங்களாகவே பல படங்களில் வில்லன்களுக்கு துணை பாத்திரமாக நடித்து இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல துணை நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் கராத்தே ராஜாவும் ஒருவர். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக பள்ளிக்கூடங்களில் கராத்தே வகுப்பு நடத்தி வந்துள்ளார்.

   

ஆனால் இவருக்கு சினிமாவில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஒரு பெரிய கனவு இருந்துள்ளது.

சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பாகவே கராத்தே கற்றுக் கொடுத்து வந்த இவர் அதை விட்டுவிட்டு படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.

அதன் பிறகு 2004 ஆம் வருடம் பல தடைகளுக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தில் நடித்தார்.

அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் இவர் நல்ல பெயரை வாங்கி இருந்தார்.

அதன் பிறகு இவருக்கு சினிமா துறையில் அடுத்தடுத்தாக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

கில்லி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், போக்கிரி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் வில்லன்களுக்கு துணை கதாபாத்திரமாக நடித்து அசத்தினார்.

அதன் பிறகு சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு கதை உருவாக்கும் படத்தில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த கதாபாத்திரத்தில் இவர் வீரப்பனாகவே வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் மிகை ஆகாது. இவர் பல படங்களில் தன்னுடைய திறமையை அதிக அளவில் காட்டியிருந்தார்.

2009 ஆம் வருடம் கராத்தே ராஜாவுக்கு 2009 ஆம் வருடம் திவ்யா என்பவரோடு திருமணம் ஆனது. இவர்களுக்கு அழகான மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த கராத்தே ராஜாவுக்கு 2014 ஆம் வருடம் அவருடைய மனைவியோடு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் திவ்யா வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து கராத்தே ராஜா தன்னுடைய மனைவியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் திவ்யா தன்னுடைய வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு இருவரும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இவர் வினக் நடிப்பில் வெளிவந்த மன்னர் வகையறா என்ற படத்தில் நடித்துள்ளார்.