மதுரையில் சிக்னலில் இருக்கும் போக்குவரத்து காவல்துறையினர் ஒருவர் மக்களுக்கு தெம்மூட்டும் வகையில் பேசும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் காலையில் எழுந்து அலுவலகம் சென்று மீண்டும் வீட்டுக்கு வரும் வரை பரபரப்பாக சென்று கொண்டுள்ளார்கள்.
சாலைகளில் வாகனங்களில் பரபரப்பாக வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் பல சிக்னல்களை தாண்டி சென்றிருப்போம். சிக்னலில் காத்திருப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்தான். சில சமயம் மிகவும் கடுப்பாக இருக்கும். ஆனால் மதுரை மாட்டுத்தாவணி சிக்னலில் ஒரு போக்குவரத்து காவல்துறையினர் மக்களுக்கு தெப்போட்டும் விதமாகவும் புத்துணர்வு ஊட்டும் விதமாகவும் சில விஷயங்களை பேசிக்கொண்டே வேலை செய்கிறார்.
இதை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது, இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை நீங்களும் பாருங்கள் …
View this post on Instagram