உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். , குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.
குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.
குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும். இங்கேயும் ஒரு குழந்தையை அதன் அப்பா பாசத்தோடு முத்தம் கொடுக்கிறார். அந்த குழந்தைக்கு 7 மாதங்களே ஆகிறது. ஒருவயது கூட ஆகாத அந்தக் குழந்தை தன் அப்பா முத்தம் கொடுத்ததும் செம ஸ்வீட்டாக ஸ்மைல் செய்கிறது. மேலும் தன் கண், மூக்கு, வாய் என ஒவ்வொரு இடமாக குழந்தை வாலண்டியராக தந்தையிடம் முத்தம் கேட்கிறது. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இதைவிட தந்தைக்கு வேறு என்ன சந்தோஷம் இருந்துவிட முடியும்? இதோ நீங்களே இந்த காட்சியைப் பாருங்களேன்.
தமிழகத்தில் அரசியல் சூழல் வெப்பமடைந்துள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிரடி அரசியலைப் பின்பற்றி, திமுகவை ஒரு ஊழல்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ரஞ்சித்குமார் பேசுகையில் மறைந்த…
இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரைக் காண்பதற்காக அவருடைய காதலன் தனது நண்பனையும் உடன் அழைத்து வந்துள்ளார். இவர்கள்…
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிராமணி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாகத்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான…
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…