Connect with us

எருமை மாட்டை மேய்க்கும் ‘நாய்’..சாப்பிட புல் கொடுத்து வளர்க்கும் காட்சி… இணையத்தில் தீயாக பரவும் வீடியோ..!

VIDEOS

எருமை மாட்டை மேய்க்கும் ‘நாய்’..சாப்பிட புல் கொடுத்து வளர்க்கும் காட்சி… இணையத்தில் தீயாக பரவும் வீடியோ..!

விவசாய வேலை செய்யும் நாய்…பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான் ஒரு விவசாயி தன் வீட்டில் நாய் வளர்க்கிறார். அந்த நாய், ராம நாராயணன் படங்களில் வருவது போலவே அதி புத்திசாலி.

   

 

விவசாயி வளர்த்துவரும் எருமை மாட்டை அந்த நாய் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்கிறது. அந்த அந்த நாய், எருமை மாட்டுக்கு தேவையான புல்லை கொண்டு சென்று கொடுக்கிறது. அடுமட்டும் இல்லாமல், எருமை மாட்டுக்கு கழனி தண்ணீரைக் காட்டுவதோடு, எருமை மாட்டை அந்த நாயே வாயில் கயிற்றை பிடித்து மேய்ச்சலுக்கு கூட்டிப் போகிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன். அசந்து போவீர்கள்.

author avatar
Archana
Continue Reading
To Top