சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த 15 வயது பிளஸ்-1 மாணவி, கடந்த 2025 நவம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது உறவினரான 25 வயது மோகன் என்பவர் கைபேசிக்கு சார்ஜ் போடுவதாக கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அச்சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, இச்சம்பவத்தை வெளியில்கூறினால் அவமானம் ஏற்படும் எனப் பயமுறுத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.
சமீபத்தில் சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது தாயார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் மாணவி 9 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சங்ககிரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மோகனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,…
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரின் மூலம் தமிழகத்தின் முன்னணிச் சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.…
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம்…
ஒடிசா கடற்கரைக்குத் தனது 80 வயது முதிய தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மகனின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது…
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…