பெற்றோர் திருமணத்திற்கு சுமதிக்காததால் காதலனுடன் வசித்து வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரட்டி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற வாலிபரும் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த காவேரி (23) என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். தயவு செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஸ்ரீகாந்த் மற்றும் காவேரி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிறகு இருவரும் ஹைதராபாத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இதனுடைய கடந்த 27ஆம் தேதி காவேரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து அவருடைய பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.
இது பற்றி தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் காவேரியின் மரணத்திற்கு ஸ்ரீகாந்த் காரணம் என அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பிறகு போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சடனத்தை அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். தற்போது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…