முட்டை ஒரு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பதில் சந்தேகமில்லை. எனினும், முட்டை சாப்பிட்ட பிறகு சில குறிப்பிட்ட உணவுகளைச் சேர்ப்பதைத் தவிர்ப்பது நன்மைக்கு பதிலாகத் தீங்கை விளைவிக்கக்கூடும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
முட்டை சாப்பிட்ட உடனே சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டும் சேரும்போது உருவாகும் மூலக்கூறுகளை உடலால் உறிஞ்சுவது கடினமாகி, இரத்தம் உறைதலுக்கும் வழிவகுக்கலாம். அதேபோல, முட்டையுடன் சோயா பால் குடிப்பது, உடலில் புரோட்டீன் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். மீன் மற்றும் முட்டையை அடுத்தடுத்து சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.
முட்டை சாப்பிட்ட பிறகு டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் அதையும் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் தேயிலையில் உள்ள டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டீனுடன் இணைந்து குடல் இயக்கங்களைப் பாதித்து நச்சுக்களின் அளவை அதிகரிக்கும். மேலும், முட்டை சாப்பிட்ட பிறகு வாழைப்பழம், ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்கள் மற்றும் பன்னீர் போன்றவற்றைச் சாப்பிடுவது செரிமான மண்டலத்தைச் சேதப்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் வாயுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, முட்டையின் முழு நன்மையையும் பெற, இந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது அவசியம்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…