“நீ சாகப் போற.. ஜோதிடர் சொன்ன வார்த்தை… வீட்டில் 9 நாள் பூஜை”… நள்ளிரவு தூங்கச் சென்ற இளம்பெண்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

ஜோதிடரின் கணிப்பால் மனமுடைந்த பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் பாகலகுண்டே பகுதியில் உள்ள எம்.இ.ஐ லே-அவுட்டில் வசித்து வந்த 29 வயதான வித்யா ஜோதி என்ற பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவருக்கும், குடகு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது.

திருமணத்திற்கு முன்னதாக ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சென்றபோது, ஒரு ஜோதிடர் வித்யா ஜோதிக்கு ஆயுட்காலம் மிகவும் குறைவு என்று கணித்துள்ளார். இதனால் பேரதிர்ச்சி அடைந்த வித்யா ஜோதி, தான் விரைவில் இறந்துவிடுவோம் என்ற அச்சத்தில் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த ஜோதிடர் கூறிய பரிகாரத்திற்காக, அவரது குடும்பத்தினர் ஒன்பது நாட்கள் தொடர் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும், அந்தப் பெண் தனது ஆயுள் குறித்த எதிர்மறையான கணிப்பைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, தற்கொலை எண்ணத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பூஜையின் இறுதி நாளான ஒன்பதாம் நாளில், மாரம்மாதேவிக்கு தாலியை காணிக்கையாகச் செலுத்த அந்த ஜோதிடர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி வித்யா ஜோதியும் பூஜையில் கலந்துகொண்டு தாலியை காணிக்கையாக வழங்கினார். பூஜைகள் அனைத்தும் முடிந்து இரவு உறங்கச் சென்ற அவர், மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் அறைக்கதவைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, வித்யா ஜோதி தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டு கதறித் துடித்தனர்.

தகவலறிந்து வந்த பாகலகுண்டே போலீசார் வித்யா ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதிடர் சொன்ன எதிர்மறையான வார்த்தைகளைத் தாங்க முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு படித்த மென்பொருள் பொறியாளர் இதுபோன்ற மூடநம்பிக்கையால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

S.RISHVANA

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

3 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

3 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

3 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago