#image_title
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் பல பரிசோதனை முயற்சிகளை செய்துகொண்டிருந்த காலத்தில் உருவான படம்தான் ஆளவந்தான். மிகப் பிரம்மாண்டாம அதி உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த படத்தைப் படமாக்கி இருந்தார்கள். மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்து தயாரிப்பாளர் தாணுவுக்கு மிக பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இந்த படத்தின் தோல்விக்கு மோசமான திரைக்கதைதான் காரணம். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு அவரது நெருங்கிய நண்பராக இருந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் படத்தில் என்னென்ன பிரச்சனை என்று துல்லியமாக கமலுக்கு எடுத்துரைத்துள்ளார்.
சுஜாதாவின் கடிதம்:-
ஆளவந்தான் பிரீமியர் ஷோவைப் பார்த்துவிட்டு உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். டெலிபோன் செய்தபோது நீங்கள் பம்பாய் சென்றிருப்பதாக ஷண்முகம் சொன்னார். படத்தைப் பற்றிய எனது கருத்துக்களை உடனே பதிவு செய்துகொள்ளத் தோன்றியதால் இந்தக் கடிதம்.
முதலில் வாழ்த்துக்கள் ! தமிழ் சினிமாவில் ஹாலிவுட் தரத்தைத் தொழில் நுட்பத்திலும், சண்டைக் காட்சிகளிலும், கிராஃபிக்ஸ் பயன்பாட்டிலும் கொண்டுவர முடியும் என்று நிரூபித்ததற்காக. நாம் அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவானவர்கள் அல்ல என்பதை நிலைநாட்டியது இந்தப் படத்தின் மிகப் பெரிய சாதனை என்று சொல்வேன். குறிப்பாக, சினிமாவின் எல்லா சாத்தியக்கூறுகளையும் கதை சொல்லும் முறையில் பயன்படுத்தி ஒருவிதமான cult film. சில சமயம் Freak Out மாதிரி இருக்கிறது படம். அதில் தாங்கள் நடிக்கும் பாத்திரத்தில் விஜய் நடிப்பு இயல்பாகவும், நந்தகுமாரின் நடிப்பு அச்சமூட்டுவதாகவும் இருந்தது.
#image_title
இத்தனைச் சிறப்புகள் இருந்தும் கதையில் / திரைக்கதையில் நீங்கள் அதிகம் சிரத்தைக் காட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு கதாசிரியன் என்ற கோணத்தில் எனக்கு ஏற்பட்ட குழப்பங்கள் இவை:
படம் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விமர்சனம் தேவையற்றதாகத் தெரியலாம். மேலும், இந்தப் படத்தின் குறைகளுக்கு முழுப்பொறுப்பும் உங்களுடையதுதான் என்று சொல்ல மாட்டேன். சினிமா எடுப்பதின் மற்ற அவஸ்தைகளும், இடைவெளியில் தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும், மன உளைச்சலும், தாமதங்களும், முடிக்க வேண்டிய கட்டாயங்களும் காரணமாக இருக்கலாம்.
ஆனாலும், ஒரு முழுதான, மன நிறைவான படத்தை இந்தப் படம் தங்களிடமிருந்து இப்போதும் எதிர்பார்க்க வைக்கிறது என்பது மட்டும் நிஜம். ‘பம்மல் கே. சம்பந்தம்,’ ‘நரன்,’ போன்ற படங்களில் அதை நிச்சயம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன்.
Writer sujatha review for aalavanthan movie to kamal
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…