தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவுள்ள புதிய அரசில், மகளிருக்கான உரிமைத் தொகை ₹2,000 வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. திமுக அல்லது அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மே 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு பொறுப்பேற்கும் என்றும், அதன் பிறகு முதலமைச்சரின் முதல் கையெழுத்தே இந்த உரிமைத் தொகை தொடர்பான கோப்பில்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மற்றுமொரு முக்கிய அறிவிப்பாக தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மகளிருக்கு ₹2,500 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக அரசியல் கட்சிகள் இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், இது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய அரசு பதவியேற்றவுடன் இந்தத் திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…
குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…