#image_title
நான் பெண் பார்க்க சென்ற போது என்னை பார்த்து பயந்து பெண் தூக்கு மாட்டிக் கொள்ள சென்று விட்டது என்று நகைச்சுவையாக தன் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பொன்னம்பலம் பேசியிருந்தார்.
80’ஸ் 90’ஸ் காலத்தில் வில்லன் என்றாலே முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது இவரைதான். பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த இவரை பார்த்து பலரும் பயப்பட்டதுண்டு. அவர்தான் பொன்னம்பலம். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் மிகச் சிறந்த வில்லனாக வளம் வந்தார். கபாலி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்.
வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரையும் மிரளவைத்த இவர் பின்னர் சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு உடல் நலம் கோளாறு ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகிறார் .
அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு சிரஞ்சீவி, சரத்குமார், கமலஹாசன், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் உதவி செய்தார்கள். இந்நிலையில் உடல்நிலை சரியானதற்கு பிறகு பிரபல பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் உடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் தனது வாழ்வில் நடந்த பல விஷயங்களை பேசி இருந்தார் நடிகர் பொன்னம்பலம்.
சினிமாவில் பார்ப்பதை தாண்டி நேரில் பார்ப்பதற்கு கொஞ்சம் பயங்கரமாகவே இருப்பார். இதனால் பலரும் அவருக்கு பெண் கொடுப்பதற்கு தயங்கி வந்தார்கள். அதுவும் இல்லாமல் அந்த சமயத்தில் அவர் நடித்திருந்த படங்கள் அனைத்திலும் பெண்களை தூக்கிக் கொண்டு போய் கற்பழிப்பது, அடி உதை என்று பல காட்சிகளில் நடித்த காரணத்தினால் யாருமே அவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை.
ஒரு சமயம் தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு இடத்திற்கு பெண் பார்க்க சென்றிருந்தார்களாம். அப்போது பெண் இவரை பார்த்துவிட்டு வேகமாக சென்று தூக்கு மாட்ட போய்விட்டதாக கூறியிருந்தார் .தற்போது திருமணம் செய்து இருக்கும் பெண் கூட முதலில் பொன்னம்பலத்தை பிடிக்காமல் தான் திருமணம் செய்து கொண்டாராம். அப்புறம்தான் அவரது குணம் தெரிந்ததாம். திருமணமாகி ஒரு வாரம் கழித்து தான் பொன்னம்பலத்திடமே அவர் பேசினாராம். இதனை நகைச்சுவையாக அந்த பேட்டியில் கூறியிருந்தார் பொன்னம்பலம்.
தமிழ் சினிமாவில் 80's, 90's காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்த செந்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி…
பிரபல இயக்குனரான விக்ரமன் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம்…
40 வயதில் திருமணம் செய்து கொண்ட எஸ்ஜே சூர்யா பட நடிகையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசித்துக் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் குஷ்பு. வட இந்தியாவைச் சேர்ந்த அவரை தென்னிந்திய ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி…
நடிகை பேபி அஞ்சு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழில் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் குழந்தை…