“கடவுளே, இப்படியா என்ன சோதிக்கணும்”… முதலில் மாற்றுத்திறனாளி குழந்தை, 2வதும் பெண் குழந்தை… விரக்தியில் தாய் செய்த கொடூர செயல்…!

Spread the love

கர்நாடக மாநில மைசூரு மாவட்டம் அருகே உள்ள பகுதியில் சையது முஷவீர் என்பவருக்கு அபியா பானு (25) என்ற மனைவியும், பாத்திமா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும், பிறந்து பத்து நாட்களை ஆன பச்சிளம் குழந்தையும் இருந்துள்ளனர். இதனிடையே அபியா பானுவின் மூத்த குழந்தை பாத்திமா மாற்றுத்திறனாளியாக பிறந்த நிலையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அபியா பானு மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சனையும் இருந்துள்ளது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பானு நேற்று காலை கணவன் வேலைக்குச் சென்ற பிறகு தன்னுடைய 2 பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பிறகு அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். உடனே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2 பச்சிளம் குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

5 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

5 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

5 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

5 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

6 மணத்தியாலங்கள் ago