ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருடைய மகள் கீர்த்தி மீனா. இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இடுவம்பாளையம் சிவசக்தி நகரில் கணவன் மனைவி இருவரும் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் தற்போது இரண்டு வயதில் ஒரு மகள் உள்ளார். இதனிடையே சிவக்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த கீர்த்தி மீனா கணவரிடம் இது தொடர்பாக கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சியாக தனது கள்ளக்காதலனுடன் இருந்த வீடியோவை நேரடியாக மனைவியிடம் சிவக்குமார் காட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கீர்த்தி மீனா, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான சில வருடங்களில் இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள சீனியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் 25 சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச்…
மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில், ஒரு முதியவர் தான் உயிருடன் இருக்கும்போதே தனக்கான இறுதிச் சடங்கு விருந்தை (பண்டாரா) நடத்தியுள்ள…
சமூக ஊடகங்களில் கணவன்-மனைவி இடையே நடக்கும் அழகான மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் அடங்கிய காணொளிகள் பலரின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.…
அதிமுகவின் உள்கட்சிப் பிரச்னைகள் மற்றும் சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் எடுக்கப்பட்ட ஒரு விசித்திரமான மற்றும் வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக…
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை வழங்கும் தேர்தல் வாக்குறுதியை விரைவில் செயல்படுத்துமாறு முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக…